Sunday, May 24, 2009

இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்கிறார்களே இது இஸ்லாத்தில் கூடுமா?


செயற்கை முறையில் பெண்ணை கருத்தரிக்க செய்யலாமா?


"உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். எனவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்.'' (அல்குர்ஆன் 2:223)

இந்த வசனத்தில் பெண்களை இறைவன் விளைநிலங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறான். விளை நிலங்களில் விதைக்கப்படும் விதைகளை அந்த நிலங்கள் முளைக்கச் செய்வது போல் பெண்களும், ஆண்களிடமிருந்து செலுத்தப்படும் விந்துத் துளியை குழந்தைகளாக வளரச் செய்கின்றனர். இந்தப் பொதுத் தன்மை கருதியே இறைவன் விளைநிலங்களுக்குப் பெண்களை ஒப்பிட்டிருக்க முடியும் என்று தெளிவாக அளியலாம்.

நீங்கள் விரும்பிய விதமாக உங்கள் நிலங்களில் விதைத்துக் கொள்ளலாம் என்று இறைவன் அனுமதிப்பதால் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதை தடுக்க முடியாது.

ஆனால் கணவனுடைய விந்தை மாத்திரம் தான் ஒரு பெண்ணுடைய கருவறையில் செலுத்தலாமே தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் செலுத்தக் கூடாது.

""உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலங்கள்'' என்று இறைவன் கூறுவதி-ருந்து ஒருவன் தனது மனைவியைத் தவிர மற்ற எவரது கருவறையிலும் எந்த முறையில் விதைக்கலாகாது என்பதையும், அது போலவே ஒரு பெண் தன் கணவனது விந்தைத் தவிர மற்ற எந்த ஆடவனுடைய விந்தையும் தனக்குள் விதைத்துக் கொள்ளலாகாது என்பதை தெளிவாக அறிகிறோம்

No comments:

Post a Comment