Monday, December 28, 2009

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

இரு கடல்களுக்கிடையே தடுப்பு
திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியுருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும்இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை. (திருக்குர்ஆன் 27:61)

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்ப்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.(திருக்குர்ஆன் 55:19,20)

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.


இது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்?

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

Sunday, December 27, 2009

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். (திருக்குர்ஆண் 23 :18 )
பூமியின் மேற்ப்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580 தான் கண்டறிந்தனர்.

சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

Thursday, December 17, 2009

பூமியைத் தொட்டிலாக



பூமியைத் தொட்டிலாக
திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக்
குறிப்பிடுகிறது.
அவனே பூமியை உங்களுக்குத்ப் தொட்டிலாக அமைத்தான். (திருக்குர்ஆன் 20:53)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன் 43:10)

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78:67)

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கா ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கா ராட்டினம் போல் சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்கு தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் பொது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அது அவர்களுக்கு சுகமாகவும், நித்திரை தரக்கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத்தான் அல்ல்லாஹ் குறிப்பிடுகிறான்.

ஓரங்களில் குறையும் பூமி



ஓரங்களில் குறையும் பூமி
நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

நிலபரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலபரப்பு கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலபரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குரானில் கூறப்பட்டுள்ளது.

பூமியை அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவரும் இல்லை. அவவன் விரைந்து விசாரிப்பவன். (திருக்குர்ஆன் 13 :4 )

அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும் அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம் "பூமியை அதன் ஓரப்பகுதிகளில் குறைத்து வருகிறோம்" என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்? (திருக்குர்ஆன் 21 : 44 )

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது.

Monday, December 14, 2009

முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் பொது அதை முளைகளாக நாடியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

மலைகளை முளைகளாக நாட்டினான். திருக்குர்ஆன் (79 :31 )


பூமியை தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78 :6,7 )


அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம், இனிமையான நீரையும் உங்களுக்கு புகட்டினோம் .. திருக்குர்ஆன் (77 :27 )


பூமியை விரித்தோம் , அதில் முளைகளை நாட்டினோம் , அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம் . திருக்குர்ஆன் (15 :19 )

பூமி உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும் , நீங்கள் வழியரிவதர்க்காக பல பாதைகளையும் , நதிகளையும் , பல அடையாளங்களையும் அவன் அமைத்தான் . நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர் . திருக்குர்ஆன் (16 :15,16)


பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதர்க்காக முளைகளை ஏற்ப்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்ப்படுத்தினோம். (திருக்குர்ஆன் 21:31)


(நீங்கள் இணை கற்ப்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி , அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கு இடையே தடுப்பையும் ஏற்ப்படுத்தியவனா ? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா ? இல்லை ! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை . (திருக்குர்ஆன் 27:61)


நீங்கள் பார்க்கக்கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்ந்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 31 :10 )


அதன் மேலே முளைகளை ஏற்ப்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே. (திருக்குர்ஆன் 41:10 )


ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதர்க்காக அறியப்படுவதே முளைகலாகும்.


இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.


வேகமாக பூமி சுழலும்போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.


இந்த நிலை ஏற்ப்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள். கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.


இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கணம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முலைகள் நட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.


ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.


இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.


பூமி முதலில் உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதற்க்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.


முதல் இரண்டு நாட்களில் பூமியை படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்ப்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41 :10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.

Monday, December 7, 2009

புவி ஈர்ப்பு சக்தி


புவி ஈர்ப்பு சக்தி

வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்த தூண்களும் இல்லை. என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் பொது தூங்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்ணனையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.


நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். (திருக்குர்ஆன் 13 :2 )


நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். (திருக்குர்ஆன் 31:10 )


நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும்,பூமிக்கும் தூண்கள் உள்ளன. ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது." என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.


பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடிக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம்.


இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோள்களும் அந்தரத்தில் எவ்வித பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியை பார்க்கின்றோம்.


எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.


வானத்திற்கும்,பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது முஹம்மது நபியவர்கள் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.

வானங்களையும் பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் "பார்க்கின்ற தூண்களின்றி" என்ற சொல்லைப் பயன்படுத்தி நம்மால் பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை இறைவன் மறைமுகமாக குறிப்பிடுகின்றான்.


திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.


பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுப்படுத்துகிறான்.


வானவ்களும்,பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 35:41)


வானங்களும் பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.


வானங்களும் பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ,குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.


புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத்த் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(திருக்குர்ஆன் 16 :79 )


வானங்களிலும்,பூமியிலும் உள்ளையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறிய வில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தளையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.(திருக்குர்ஆன் 24:41 )


அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும், இருப்பதை அவர்கள் கனவில்லையா? அளவற்ற அருளாலனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.(திருக்குர்ஆன் 67:19 )


பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது "அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன." உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கிறான்" என்று இறைவன் கூறுகிறான்.


இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.


வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.


பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக்கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக்கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையை தள்ளாமல் இந்த பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.


இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்ப்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

Thursday, December 3, 2009

பூமியில் தான் வாழ முடியும்.

பூமியில் தான் வாழ முடியும்.

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது.விண்வெளிப்பயணம் கூட சாத்தியம் எனக்கூறும் திருக்குர்ஆன் ஆனால் பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் எனவும் வேறு எந்தக் கிரகத்திலும் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்,வசதியும் உள்ளன." என்றும் கூறினோம்.(திருக்குர்ஆன் : 2 :36)

"உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும் வசதியும் உள்ளன."என்று (இறைவன்) கூறினான். .(திருக்குர்ஆன் : 7:24)

"அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்" என்றும் கூறினான்..(திருக்குர்ஆன் : 7:25)

பூமியில் உங்களை வாழசெய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்ப்படுத்தினோம்...(திருக்குர்ஆன் : 7:10)

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள். ..(திருக்குர்ஆன் : 30 :25)

"பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள்" என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒற்றோடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பபடுவார்கள்" என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கும் வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுப் படுத்துகிறது.

"இதில் தான் வாழ்வீர்கள்" என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது." என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக்கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்துவிடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக்கூடாது. அது இயற்க்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாக கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாக சுழல்வதால் தான் கோடை,குளிர்,வசந்தம்,மற்றும் இலையுதிர்க்காலம் ஏற்ப்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ,குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.எழுத படிக்கத்தெரியாத முஹம்மது நபிக்கு "இதில் தான் வாழ்வீர்கள்" என்று எவ்வாறு அடித்துக்கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

Tuesday, December 1, 2009

வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

வானத்தை "பாதுகாக்கப்பட்ட முகடு" என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான்.எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்ப்பனை செய்யாதீர்கள்! (திருக்குர்ஆன் 2 :22 )


வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளை புறக்கணிக்கின்றனர்.(திருக்குர்ஆன் 21:32 )


அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்..(திருக்குர்ஆன் 40:64 )


உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!..(திருக்குர்ஆன் 52:5 )


வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?


விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப் படுகின்றன. அங்கிருந்து வருகின்ற ஏறி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.


மேலே இருக்கின்ற முகடு சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது.இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும் .

Tuesday, November 17, 2009

விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு.

விண்வெளிப் பயணம் சாத்தியமே.

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உரிவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இர்நகியுல்ளான்.

நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனை சுற்றிக் கொண்டு இருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றி சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த எழுத படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கு சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்ப்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது.

மனித ஜின் கூட்டமே வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
(திருக்குர்ஆன்-55 :33 )

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்: மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாக சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதை கற்பனை செய்து கூட பார்த்ர்ஹதிராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதெற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.
விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர் வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழி தவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாகி விடுகிறான். இவாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான். (திருக்குர்ஆன்-6:125)

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை.விர்ரென்று மனிதன் மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்க்கொல்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோணத்திலும் விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக! (திருக்குர்ஆன் 51:17 )


பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.


Saturday, November 14, 2009

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!


திருப்பித் தரும் வானம்!

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.
(திருக்குர்ஆண்:86:11,12,13,14)


திருக்குர்ஆண் முகம்மது நபியின் கற்ப்பனை அல்ல. மாறாக தன்னுடைய கூற்றாகும் என்பதை இறைவன் சத்தியம் செய்து கூறும்போது திருப்பித் தரும் வானம் என்ற அற்ப்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பி தருகிறதென்றால் ஏராளாமான விசயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும்,நீர் நிலைகக்ளிலிருந்தும் உருஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றுருகின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு துருமபவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கும் செயற்கைக் கொள் மூலம் ஓளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஓளி பரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கின்றான்.

இன்னும் நாம் சிந்திக்கும் பொது ஏராளமான விசயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முகம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது, படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

Thursday, November 12, 2009

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

வானங்களும்,பூமியும் இணைந்திருந்தன என்பதையும்,அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்,உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆண் 21:30)

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆண் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுஉக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம்தான் பிரித்து பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆண் இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்த தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆண் தெளிவாக கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பாட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும்,பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம் என அவை கூறின. (திருக்குர்ஆண்:41:11)

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆண் கூறி இது இறைவேதம் தான் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது.

Saturday, November 7, 2009

திருக்குர்ஆண் ஓர் வாழும் அற்புதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி.570-ல் பிறந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாராண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது அறிவைக்கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டுகொள்ளும்.

நூறு வருடங்களுக்கு பின் என்ன நடக்கும், என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்க்கு காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாக சேர்ந்து உருவாகிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்து பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதை காண முடியும்.அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும்,படிக்கவும் தெரியாத,மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆணை பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியில் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உர்ப்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களை குர்ஆண் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. 21 ஆம் நூற்றாண்டின் ஓர் தேர்ந்த மருத்துவ மேதையை விட அழஅகாக பேசுகிறது.

தாவரங்களைப் பற்றி பேசினாலும், மலைகளைப் பற்றி பேசினாலும், நதிகளைப் பற்றி பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்கஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னாள் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்ப்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை திருக்கஆண் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆண் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் "இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்" என்ற முடிவுக்குத்தான் வந்தாக வேண்டும்.

இன்றைய அறிவியலின் நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆண் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வர்.முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆண் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கொரும் அளவுக்கு குர்ஆண் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாகிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டுக் கொண்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு எல்லாராலும் ஏற்கத்தக்க அற்ப்புதமான தீர்வுகளை குர்ஆண் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்த கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குளம்,கோத்திரம்,சாதி,இவற்றால் ஏற்ப்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் திருக்குர்ஆண் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒலித்துக் கட்டியதை இதற்க்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளை திருக்கஆண் கூறுகிறது.அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளாம்.

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக திருக்குர்ஆண் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

Sunday, October 25, 2009

1400 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆண் அருளப்பட்டதற்கான ஆதாரம் என்ன?






இப்பொழுதுள்ள குரானையும் அருங்காட்சியத்தில் உள்ள அந்த பழைய குரானையும் ஒப்பிட்டால் எந்த வேறுபாடும் காண முடியாது.
முதலில் இந்த கேள்வி உருவானதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.குர்ஆணை படித்து பார்க்கும் எவருக்கும் இதில் உள்ள அறிவியல் உண்மையாக இருக்கட்டும்,குற்றவியல் சட்டமாக இருக்கட்டும்,பெண்ணுரிமை சம்பத்தப்பட்ட விசயமாக இருக்கட்டும்,ஒழுக்ககேடுகளுக்கு தடை போடும் விசயங்களாகட்டும் படித்து பிரமிச்சிப்போய் முதலில் தோன்றும் சந்தேகம் இந்த குர்ஆண் நூறு சதவிகிதம் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாம் கற்று தேர்ந்த ஒரு மனிதனால் எழுதப்பட்டதுபோல் இருக்கிறதே என்பதுதான்.

எனவேதான் இந்த குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்த யாரோ சிலரால் எழுதப்பட்டு நபியவர்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றது என்பது.

இந்த சந்தேகத்திற்கு வரலாற்று விளக்கங்கள்தான் தேவை முகம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் கற்காலம் அல்ல வரலாறுகளை எழுதி பாதுகாத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்றிருந்த காலம்தான் அது.அவர்களது பிரச்சாரம்,சாதனை யாவும் வரலாற்றில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிமல்லாதவர்களும் நபியவர்களின் வரலாற்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வரலாற்றின்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கி.பி.571 ஆம் ஆண்டு பிறந்தார்கள். அவர்களின் நாற்பதாம் வயதில் (ஆங்கில வருடக்கனக்குப்படி 39 ஆம் வயதில்) தம்மை இறைத்தூதர் எனக் கூறினார்கள். அப்போது முதல் தமக்கு குர்ஆண் அருளப்பட்டதாக கூறினார்கள். எனவே நபிகள் நாயகத்தின் காலம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து குர்ஆணுடைய காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மரணித்த பின் 20 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்றும் கூட ரஷ்யாவின் தாஸ்கண்டு நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள அருங்காட்சியகத்திலும் இன்றும் கூட இந்த வரலாறுகளுக்கு சாட்சியம் கூறிக்கொண்டு இருக்கின்றன.
எனவே திருக்குர்ஆணை சில வருடங்களுக்கு முன்னாள் யாரோ எழுதி நபிகள் நாயகத்துடன் சம்பத்தப்படுத்தி விட்டார்கள் என்று கூற முடியாது. காரணம் 1400 வருடங்களுக்கு முந்தைய பிரதிகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாத்தை கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வை தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள். (2:23)
உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கர்க்கலுமே அதன் ஏறி பொருட்கள். (ஏக இறைவனை) மருப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது. (2:24)

Saturday, October 17, 2009

பகுத்தறிவு என்ற போர்வையில் பழமை வாதிகள்.


பகுத்தறிவுக்காரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு காட்டுப்பகுதியிலிருந்து ஒரு பெரிய ஆற்றை கடந்து ஓர் ஊருக்கு வருகிறான் அவனைப் பார்த்து எப்படியப்பா உன்னால் வரமுடிந்தது என்று கேட்கிறோம்.அவன் அதற்க்கு தான் அந்த ஆற்றை கடக்க முற்ப்பட்ட போது தூரத்தில் இருந்த ஒரு நீண்ட பெரிய மரம் ஒன்று தானாகவே தன் அருகில் வந்து பாலம் போல் அந்த ஆற்றின் குறுக்கே சாய்ந்து கொண்டது அதன் மேல் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன் என்று தான் கடந்து வந்த கதையை சொல்கிறான்.

இதை யாராவது அறிவுள்ள மனிதனால் நம்ப முடியுமா?நிச்சயமாக ஒரு பகுத்தறிவுள்ளவன் இந்த சம்பவத்தை கேலி செய்து சொன்னவனை பைத்தியக்காரன் என்றுதான் சொல்வான்.

நான் கேட்கிறேன் ஒரு மரம் தானாக ஆற்றின் பாலமாக வந்ததை மறுக்கும் பகுத்தறிவு இந்த பேரண்டம் அத்தனை கோள்கள் பல அறிவியல் அதிசயத்தை உள்ளடக்கியிருக்கும் கடல் இவையெல்லாம் தானாக உர்வாகவில்லை என்பதை மட்டும் உங்கள் பகுத்தறிவு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது?

உண்மையை சொல்லுங்கள் நீங்கள் பேசுவது பகுத்தறிவா?அடி முட்டாள் தனமா?இல்லை பகுத்தறிவு போர்வையில் நீங்கள் போடும் வெளி வேசமா?

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறிவு ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில் நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள உண்மையை ஏற்றுக் கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த மிருகத்திற்கு அது புரியுமா? ஜயறிவு மிருகமான அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா? சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட அறிவீனமாகும்.
பெரியாரையாவது ஒழுங்காக பின் பற்றினார்களா என்றால் இல்லை என்றுதான் நம் பகுத்தறிவு சொல்கிறது.
கல்லை வணங்காதே கல்லுக்கு பொட்டு வைக்காதே பூ போஅடாதே நீ செய்வதை அந்த கல் உணராது என்று சொன்ன பெரியாரின் உருவத்தையே கல்லால் செதுக்கி அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்து நினைவஞ்சலி செலுத்தும் வேடிக்கையை நாம் பார்க்கிறோம்.

இப்போ நாம் கேட்கிறோம் பகுத்தரிவாதிகளே நீங்கள் போட்ட மாலையையும் மரியாதையும் அந்த கல்(பெரியார்)ஏற்றுக்கொண்டதா?அதை உணர்ந்து கொண்டதா?

மேலும் ஒருவன் இறந்த நாளை நினைவுப்படுத்தி கொண்டாடுவது தீபாவளி. அதனால் அதை கொண்டாட கூடாது என்று நாத்தீகம் பேசுகிறீர்கள்.
இது போன்று நாட்களை முர்ப்படுத்தி நினைவு நாள் பிறந்த நாள் என்று கொண்டாடுவது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல என்றும் சொல்லும் நீங்கள் பெரியார் அவர்களின் அவர்களின் நினைவு நாளை முன்னீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் இரத்த தானம் செய்வதும் ஏன்?மற்ற நாட்களில் செய்ய வேண்டியதுதானே?
இப்படி பகுத்தறிவாளர்களை நோக்கி லட்சக்கணக்கான கேள்விகள் உண்டு.
இங்கே ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இஸ்லாத்த்திர்க்கு அளவுகோல் குரானும்,நபிகள் நாயாகம் அவர்களின் தூய்மையையான வழிகாட்டுதளும்தான்.நீங்கள் இவ்வுலகில் பார்க்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிகளும் அரபு நாட்டில் வாழும் சில பெயரளவு முஸ்லீம்களும் அல்ல.குறிப்பாக தர்கா வணங்கிகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இதை நான் ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் சிலர் இஸ்லாத்தை தவறான வழியில் தெரிந்து கொண்டு அதாவது நுனிப்புல் மேய்ந்து விட்டு விமர்சனம் என்ற பெயரில் விசமத்தனம் செய்து கொண்டு இருக்கின்றனர்.

குரான் எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது..

குரான் மூடப்பழக்க வழக்கங்களை எதிர்க்கிறது.

குரான் ஒருகாலும் அறிவியலுக்கு முரண்படாது.

குரான் கூறும் சட்டமே உலக அமைதிக்கு தீர்வு.

குரான் பெண்ணுரிமையை பேசுகிறது.

இப்படி குரான் விடும் சவால்களை எதிர்த்து விமர்சனமோ விவாதமோ செய்யும் யாராக இருந்தாலும் சரி தயவு செய்து எழிய தமிழில் உள்ள குரான் மொழிபெயர்ப்புகளை படித்துவிட்டு வாருங்கள்.

குறிப்பு:உங்களுக்கு குரான் தேவைப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் இலவசமாக அனுப்பி வைப்போம்.(இஸ்லாம் அல்லாத சகோதரர்களுக்கு மட்டும்)


Sunday, October 11, 2009

பெண்களுக்கு பர்தா பாதுகாப்புக் கவசமா?


ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்ற இந்த சகோதரிக்கு இந்த ஆடை என்ன தடையாகவா இருந்தது?


(நபியே!) முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப்பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதை தவிர (வேறு எதையும் வெளிக்காட்டலாகாது)தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ளவேண்டும். மேலும் முஃமினான பெண்கள் தன் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டிவாழும் பெண்களைவிரும்பமுடியாத அளவு வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்கள் பற்றி அறிந்துகொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களை தவிர வேறு ஆண்களுக்கு தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்தக்கூடாது. தங்களுடைய அலங்காரத்தில் மறைந்திருப்பதை அறிவிக்க தங்கள் கால்களை தட்;டித் தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமீன்களே இதில் உங்களிடம் ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் நீங்கள் தவ்பா செய்து பிழைபொருக்கத் தேடி, நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். அல்குர்ஆன் - 24 : 31

நபியே நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை தாழ்த்திக் கொள்ளும்படி கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு நோவினை செய்யப்படாமல் இருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிக்க அன்புடையவன் அல்குர்ஆன் 33: 59

நபியின் மனைவிகளே நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். அறியாமைக் காலத்து பெண்களைப் போல அலைந்து திரியாதீர்கள். தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைபிடித்து தொழுங்கள். ஜக்காத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும் உங்களுடைய தூதருக்கும் கீழப்படியுங்கள். நபியின் வீட்டை உடையவர்களே உங்களை விட்டும் அசுத்தத்தை நீக்கி உங்களை பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் : 33 :33

இறைவன் இந்த உலகில் ஆணையும், பெண்ணையும் ஜோடியாக படைத்துள்ளான். அவர்கள் தங்களை தவறான பாதையை விட்டும் தடுத்துக்கொள்ள முஃமினான ஆண்களிலும், பெண்களிலும் தகுதியுள்ளவர்களுக்கு திருமணத்தை இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. அதில் அவனே அபிவிருத்தியை ஏற்படுத்துவதாக கூறுகிறான். இதிலிருந்து உடல் கவர்ச்சியின் ஆபத்தை இஸ்லாம் தெளிவுபடுத்துகிறது.

இன்று உலகில் உடல் கவர்ச்சி ஏற்படுத்தும் பாடு அனைவரும் அறிந்ததே. இதுவே மனிதர்களின் மனதில் சந்தேகங்களையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது. ஷைத்தான் மனிதனுக்கு பரம எதிரியாய் இருக்கிறான். அவன் மனிதர்கள் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றான்.

பெண்களுக்கு ஆடை குறைப்பு கலாச்சாரத்தை இன்று நாகரிகம் என்ற பெயரிலும், கலாச்சாரம் என்ற பெயரிலும், உண்டாக்கியதின் விளைவு. பெண்களை போகப்பொருளாக பார்க்கப்படுகிறார்கள், இதற்கு இந்த கேடு கெட்ட ஆடை குறைப்பு கலாச்சாரமே காரணம்.

மனித சமூகத்தில் உலவ எல்லா சமூகமும் ஆண் பெண் இருபாலர் அணிகின்ற ஆடையின் அளவை வகுத்துள்ளனர். ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வகுத்துள்ள ஆடையானது தன் உடல் கவர்ச்சி(அங்கஅவையங்கள்) வெளியில் தெரியாதவண்ணம் முகம், கைகளைத்தவிர மற்ற பாகங்களை மறைக்கும் முகமாக அமைகின்ற ஆடையே பர்தாவாகும்

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: இருவர் நரகவாசிகளாவர். அவர்களை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை. முதலாமவர்கள்;, மாட்டின் வாலைபோன்ற சவுக்கை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து ஆட்சி அதிகாரம் செய்பவர்கள். இரண்டாம் வகுப்பினர், அரை குறை ஆடையணிந்து நிர்வாணமாக காட்சியளித்து, நடக்கும்போது ஒய்யார நடை நடந்து, அடுத்தவர்களை கிரங்கடித்து, தலையை தாழ்த்தி நடக்காது தன் அழகை காட்டவேண்டும் என்பதற்காக தலையை தூக்கிக்கொண்டு நடக்கும் பெண்கள். இவர்கள் இருவரும் சுவனத்தில் நுழையவே முடியாது. அன்றியும் அதன் வாடயைக்கூட நுகரமுடியாது. அவர்களை விட்டும் சுவனத்தின் வாடை பல மைல்களுக்கப்பால் இருக்கும். அறிவிப்பாளர்: அப+ஹ{ரைரா, ஆதாரம்: முஸ்லிம்.

பெண்களின் உரிமைமையைப் பேணுவதில் இஸ்லாம் கொடுத்துள்ள முக்கியத்துவம்;போல் வேறு எந்தமதத்திலும் காண இயலாது. இன்று பெண்ணுரிமை பேசுபவர்கள், இவ்வுலகில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு, பெண் சிசு கொலை, முறைகேடான குழந்தை பிறப்பு, விபச்சாரம் போன்ற, பெண்களுக்கு கொடுமைகள் ஏற்படும் போதும் அவர்களின் உரிமைகள் மீரப்படும்போதும் பெரும்பாலும் அவர்களை கைவிட்டுவிடுவதைத்தான் கண்கூடாகக் காணமுடிகிறது. ஆனால் இஸ்லாம் ஒன்றே பெண்ணுரிமையையும், பெண் பாதுகாப்பையும் ஒருங்கே அளிக்கிறது. அதற்கான ஒரு சான்றுதான் பர்தா.

பர்தா அணிந்த பெண்கள் தங்கள் உலக கடமைகளை, பாதுகாப்போடு செயல்படுத்த முடியும். புதிய கலாச்சாரம் என்று பேசும் மேலை நாடுகள்கூட பர்தாவை உணரத் துவங்கியுள்ளதையும் அங்குள்ள பெண்களிடமிருந்து பர்தாவுக்கான ஆதரவுக்குரல் ஓங்கிஒலிப்பதையும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்