Wednesday, October 20, 2010

ஆழ் கடலின் அலையும் இறைவேதத்தின் நிரூபணமும்


கடலின் மேற்ப்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன. கடலின் ஆழத்தில் ஏற்ப்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது.என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர் ஆன் தெளிவாக கூறி இது இறைவனின் வார்த்தை தான் உறுதிப் படுத்துகிறது.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாக பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. திருக்குர் ஆன் 24:40


இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற்ப்பரப்பில் அதுவும் கடற்க்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.


கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்ச்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைபற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாக கூறியிருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.

எனவே திருக்குர் ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.

Tuesday, October 12, 2010

மனிதர்களால் குறையும் பூமி.


அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது. திருக்குர் ஆன் 50:4

அல்லாஹ் உங்களை பூமியிலிருந்தே வளர்த்து பெரிதாக்கினான்.
திருக்குர் ஆன் 71:17

உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொள்ளப்பட்டிருக்கிரத். அதில் மிகப்பெரிய உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாளுமதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை. பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக,மரங்களாக மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருளுமே தங்களின் எடையை பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியை படைத்த போது இருந்த அதே எடை தான் இருக்கும்.

மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளருகிறான் என்ற அறிவியல் உண்மையை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னாள் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

இதே தத்துவத்தை மற்றொரு கோணத்திலும் திருக்குர் ஆன் பின் வரும் வசனத்திலும் கூறுகிறது.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளை விளக்கியுள்ளோம். திருக்குர் ஆன் 6:98

இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் திருக்குர் ஆன் பயன் படுத்தியிருக்கின்ற "ஒப்படைக்கப்படும் இடம்" என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையை சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ்சிறிய அளவில் பிறப்பெடுக்கின்றான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறந்த போது இருந்த இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மன்னில்லிருந்த சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள். பருப்புகள் இன்ன பிற சத்துக்களை பெற்று தன்னை பெரித்தக்கி கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.

50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ எடை குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த ஐம்பது கிலோ எடையை பெறுகிறானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.

மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாக சாப்பிடுவதில்லை மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி "ஒப்படைக்கப்படுகின்ற இடம்" என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன் படுத்தியிருக்கின்றான்.

Tuesday, August 3, 2010

உதிக்கும் பல திசைகள்



சாதாரணமாக திசைகளைப்
பற்றி பேசும் போது கிழக்கு

மேற்கு என்று ஒருமையில் தான்

குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன்

இரண்டு

கிழக்குகள் இரண்டு மேற்குகள்

எனவும் பல கிழக்குகள் பல

மேற்குகள் எனவும்

பயன்படுத்தியுள்ளது.

(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் 37:5

(அவன்) இரண்டு கிழக்கு திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்கு திசைகளுக்கும் இறைவன். திருக்குர்ஆன் (55:17)

கிழக்குகளுக்கும் மேற்க்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்ப்போர் அல்லர். திருக்குர்ஆன் (70:40)

இரண்டு கிழக்குகள்
இரண்டு மேற்குகள்' என்ற

சொற்றொடரும் 'பல கிழக்குகள் பல

மேற்குகள்' என்ற சொற்றொடரும் இந்தப்
பூமி
உருண்டை என்பதற்குத் தெளிவான

சான்றாக அமைந்துள்ளது.

பூமி தட்டையாக
இருந்தால் சூரியன் ஒரு இடத்தில்

உதித்து மறு இடத்தில்

மறைந்து விடும்.

சூரியன் உதிக்கும் திசையைக்

கிழக்கு என்போம். மறையும்

திசையை மேற்கு

என்போம்.

பூமி உருண்டையாக
இருந்தால் நமக்கு எந்தத் திசையில்

சூரியன்

மறைகிறதோ அதே திசையில் சூரியன்

உதிப்பதை பூமியின் மறு பக்கத்தில்

உள்ளவர் காண்பார், அதாவது நமக்குக்

கிழக்காக இருப்பது மறு பக்கம்

உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது.

நமக்கு மேற்காக இருப்பது மறு பக்கம்

உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது.

இரண்டு கிழக்குகள்
,
இரண்டு மேற்குகள்

என்பது எவ்வளவு பொருள்

பதிந்தது என்பதை நாம் சிந்திக்க

வேண்டும்.

பூமி உருண்டையாக இருந்தால்
பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும்

உதிக்கும் பல

திசைகள் உருவாகின்றன; மறையும்

திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

பல உதிக்கும் திசைகள், பல மறையும்
திசைகள் என்ற சொல் மூலம்

பூமி உருண்டை

வடிவிலானது என்ற அறிவியல்

உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும்

விஞ்ஞானி

பேசுவது போல் திருக்குர்ஆன்

பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன்

இறை வேதம்

என்பதற்குச் சான்றாகும்.