Thursday, May 7, 2009

குளோனிங் முறையில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனை வணங்க வேண்டுமா?


அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா?


இறைனவன் உயிரினங்களில் ஏற்கனவே படைத்து வைத்துள்ள கோடிக்கணக்கான மரபணுக்களில் ஒன்றை எடுத்து அதை வளர்த்துக் காட்டுவது தான் குளோனிங். இது படைத்தல் ஆகாது.


மண்ணிலிருந்தோ, உலோகத்திலிருந்தோ ஒருயிரணுவையோ, அல்லது மரபணுவையோ படைக்கச் சொல்லுங்கள்! ஒறு எறும்பின் மரபணுவைக் கூட மனிதனால் படைக்க முடியாது.


நான் உங்களிடம் தருகின்ற விதையை தண்ணீர் ஊற்றி வளர்த்தால் நீங்கள் படைத்தவராக மாட்டீர்கள். இறைவன் படைத்து வைத்துள்ளவற்றை மனிதன் கண்டுபிடிக்கிறானே தவிர, மனிதனே எதையும் படைக்க வில்லை.


உயிரணுவும், மரபணுவும் இல்லாத களி மண்ணிலிருந்து அவற்றை அல்லாஹ் எவ்வாறு உருவாக்கினானோ அப்படி உருவாக்கும் போது தான் மனிதன் கடவுளின் வேளையை செய்தான் எனக்கூற முடியும். ஒருக்காலும் இது மனிதனால் முடியவே முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

No comments:

Post a Comment