Thursday, December 17, 2009

பூமியைத் தொட்டிலாக



பூமியைத் தொட்டிலாக
திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக்
குறிப்பிடுகிறது.
அவனே பூமியை உங்களுக்குத்ப் தொட்டிலாக அமைத்தான். (திருக்குர்ஆன் 20:53)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான். (திருக்குர்ஆன் 43:10)

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? (திருக்குர்ஆன் 78:67)

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கா ராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கா ராட்டினம் போல் சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்கு தெரிவதும் இல்லை.

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும் பொது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அது அவர்களுக்கு சுகமாகவும், நித்திரை தரக்கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாக சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத்தான் அல்ல்லாஹ் குறிப்பிடுகிறான்.

No comments:

Post a Comment