Thursday, November 12, 2009

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory)

வானங்களும்,பூமியும் இணைந்திருந்தன என்பதையும்,அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும்,உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (திருக்குர்ஆண் 21:30)

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆண் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுஉக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம்தான் பிரித்து பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத்தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆண் இருந்தால் மட்டுமே இதை கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்த தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆண் தெளிவாக கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். "விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பாட்டு நடக்க வேண்டும்" என்று அதற்கும்,பூமிக்கும் கூறினான். "விரும்பியே கட்டுப்பட்டோம் என அவை கூறின. (திருக்குர்ஆண்:41:11)

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆண் கூறி இது இறைவேதம் தான் என்பதை சந்தேகமற நிரூபிக்கிறது.

1 comment:

  1. http://senkodi.wordpress.com/2009/11/13/islam-7/#comments

    இதில் பீர் எழுதிய பின்னூட்டத்தை பார்க்கவும்

    ReplyDelete