Saturday, November 14, 2009

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!


திருப்பித் தரும் வானம்!

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.
(திருக்குர்ஆண்:86:11,12,13,14)


திருக்குர்ஆண் முகம்மது நபியின் கற்ப்பனை அல்ல. மாறாக தன்னுடைய கூற்றாகும் என்பதை இறைவன் சத்தியம் செய்து கூறும்போது திருப்பித் தரும் வானம் என்ற அற்ப்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பி தருகிறதென்றால் ஏராளாமான விசயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும்,நீர் நிலைகக்ளிலிருந்தும் உருஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றுருகின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு துருமபவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கும் செயற்கைக் கொள் மூலம் ஓளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஓளி பரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கின்றான்.

இன்னும் நாம் சிந்திக்கும் பொது ஏராளமான விசயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முகம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது, படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

No comments:

Post a Comment